நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு, அதன் விளைவாக மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், முக்கியமான சமூகப் பிரச்சினையை திரைமொழியில் பதிவு செய்கிறது.
மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், உண்மை, தைரியம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கான போராட்டத்தை வலுவான கதைக்களம் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளின் மூலம் சொல்லவுள்ளது.
Zee Studios வழங்கும் இந்த திரைப்படத்தை MIG Production நிறுவனம் தயாரித்துள்ளது. சேட்டன் டி.கே. இயக்கியுள்ள இப்படத்திற்கு சாகர் பி. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், 2026 ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
டிரெய்லர் குறித்து இயக்குநர் சேட்டன் டி.கே. கூறியதாவது..,
“தி இந்தியா ஸ்டோரி என்பது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; நாம் அவசியமாக நடத்த வேண்டிய ஒரு உரையாடல். ஒவ்வொரு வீட்டையும் அமைதியாக பாதித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினையை இந்தக் கதையின் மூலம் வெளிச்சம் போட்டு காட்ட விரும்பினோம். உண்மை, தைரியம் மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பயணத்தை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. இது பார்வையாளர்களை சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், நம்மைச் சுற்றியுள்ள நிதர்சனத்தை உணரவும் தூண்டும் என்று நம்புகிறோம்.”
நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது..,
“தி இந்தியா ஸ்டோரி படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது. மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டாலும் உண்மைக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதுவே இந்தப் படத்தின் சிறப்பாகும். டிரெய்லர் பார்வையாளர்களை கவர்ந்து, இந்த சக்திவாய்ந்த கதையை பெரிய திரையில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.”
நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,
“தி இந்தியா ஸ்டோரி படத்தின் உணர்வுப்பூர்வமான மையத்தை டிரெய்லர் மிகச்சரியாக வெளிப்படுத்துகிறது. நம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஒரு சாதாரண மனிதன், அசாதாரணமான சவாலுக்கு எதிராக போராடும் கதையிது. இதன் உணர்வுகளும், கருத்தும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும் என்று நம்புகிறேன். ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் அனைவரும் இந்தப் படத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் உள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே , படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல் வரிகளை ஷகீல் அசாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே கவனித்துள்ளனர்.





