உணர்வுகளையும் மனித உறவுகளையும் மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி வரும் இயக்குநர் சிவா நிர்வாணா, மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’. குடும்பம், பாசம், நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் மனமாற்றம் என பல்வேறு உணர்வுகளை ஒன்றிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
‘நின்னு கோரி’, ‘மஜிலி’, ‘டக் ஜெகதீஷ்’, ‘குஷி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்பட பாணியை உருவாக்கிய சிவா நிர்வாணா, ‘இருமுடி கட்டு’ படத்தின் மூலம் தனது முந்தைய படைப்புகளிலிருந்து மாறுபட்ட களத்தைத் தேர்வு செய்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. இதுவரை ரவி தேஜாவை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘இருமுடி கட்டு’ படத்தின் அடிப்படை தந்தை – மகள் உறவைச் சுற்றி அமைந்திருந்தாலும், அந்த உறவைத் தாண்டி மனித வாழ்க்கையின் பல முக்கியமான அம்சங்களை படம் பேசுகிறது. ஐயப்ப தீட்சை, ஆன்மீகப் பயணம், குடும்ப உறவுகள், தவறுகள், நம்பிக்கை, மனமாற்றம் ஆகியவை கதையின் முக்கியமான பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.
‘இருமுடி கட்டு’ குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா பகிர்ந்து கொண்டதாவது,
“‘இருமுடி கட்டு’ திரைப்படத்தை எழுதத் தொடங்கியபோது, மனித உணர்வுகளை ஆழமாக பேசும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஐயப்ப சுவாமியைப் பின்னணியாகக் கொண்டிருப்பது படத்தின் முக்கியமான அம்சம். ஆனால், பக்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்படவில்லை. ஒரு தந்தைக்கும் அவரது மகளுக்கும் இடையேயான உறவும், அந்த உறவிலிருந்து உருவாகும் உணர்வுகள், முடிவுகள் மற்றும் மனமாற்றங்களும்தான் கதையின் மையம். ஐயப்ப சுவாமி மற்றும் அவரது யாத்திரையைச் சுற்றியுள்ள பாரம்பரியங்கள் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பரிச்சயமானவை. அந்தப் பழக்கமான ஆன்மீகப் பின்னணியைப் பயன்படுத்தி, கதைக்கு மேலும் ஒரு உணர்வுப்பூர்வமான பரிமாணத்தைச் சேர்க்க விரும்பினேன். ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பக்தி என்பது மனித வாழ்வில் தனித்த ஒன்று கிடையாது. மாறாக அது நம் வாழ்வின் ஒரு அங்கம். அதுவே கதாநாயகனின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ரவி தேஜா சாருடன் பணியாற்றியது அற்புதமான அனுபவம். இதுவரை பார்த்திராத ஒரு கதைக்களத்தில் ரசிகர்கள் அவரை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதே நேரத்தில், அவரின் வழக்கமான எனர்ஜி மற்றும் வசீகரத்தையும் இதில் பார்ப்பீர்கள். அவரது கதாபாத்திரம் பல்வேறு உணர்வுகளை கடந்து செல்லும். கதாபாத்திரத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அவர் முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.
பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள் குழுவினரும் சிறப்பாக உழைத்துள்ளனர். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதையை எழுதியுள்ளேன். ஏனெனில், உணர்வுகள் வெறும் கதையை நகர்த்துவதற்கான கருவியாக இல்லாமல், இயல்பானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார், ஒய். ரவி சங்கர் சார் மற்றும் ஒட்டுமொத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. அவர்கள் கொடுத்த ஆதரவால்தான் இந்தப் படத்தை பிரம்மாண்டத்துடனும் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடனும் உருவாக்க முடிந்தது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் நாங்கள் உருவாக்கிய உலகத்திற்கு மேலும் வலு சேர்த்தது.
இறுதியாக, பார்வையாளர்கள் தங்களையே அந்த உணர்வுகளில் காணும்போதுதான் ஒரு கதையுடன் உண்மையாக இணைகிறார்கள் என்று நான் நம்புகிறேன். குடும்பம், உறவுகள், நம்பிக்கை மற்றும் மனமாற்றம் ஆகியவற்றின் மூலம் அந்த இணைப்பை உருவாக்க ‘இருமுடி கட்டு’ முயற்சிக்கிறது. அதே நேரத்தில், ரவி தேஜா திரைப்படத்திலிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் திரையரங்க அனுபவத்தையும் வழங்கும். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என்று மனதார நம்புகிறேன்” என்றார்.
ரவி தேஜா மற்றும் சிவா நிர்வாணா முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ‘காவேரி’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பையும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பையும் கவனித்துள்ளனர்.
டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிப்பில், டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’, ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் சிவா நிர்வாணா கூட்டணியில் உருவாகியுள்ள உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது. திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





