சசிகுமார் INA அதிகாரியாக நடிக்கும் பிரம்மாண்ட பீரியட் டிராமா.. படப்பிடிப்பு நிறைவு!

‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பீரியட் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரித்து வரும் இந்தப் படம், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக வலிமையான மற்றும் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தோற்றமும் கதாபாத்திரமும் இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மாண்டமான கதை சொல்லலை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளனர்.

சசிகுமாருடன் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, காட்சித் தரத்தையும் பிரம்மாண்ட அனுபவத்தையும் உயர்த்தும் வகையில் VFX பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திரையரங்குகளில் வெளியாகும் போது, பார்வையாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிலான திரை அனுபவத்தை வழங்குவதே படக்குழுவின் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. உணர்ச்சி, வரலாறு மற்றும் காட்சியழகை இணைக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சார்தக் கல்யாணி இசையமைத்துள்ள நிலையில், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.