“அரவிந்த்” பாடலை கொண்டாடிய அனிருத் – 15,000 ரசிகர்களுடன் மறக்க முடியாத இசை இரவு!

சென்னை, ஜூன் 21, 2026: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் ‘வைப் வித் அரவிந்த்’ இசை நிகழ்ச்சி, 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிராண்ட் அவதார், அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூ இணைந்து வழங்கிய இந்த நிகழ்வு, இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அனிருத்தின் புதிய சுயாதீன இசை முயற்சியான ‘அரவிந்த்’ பாடலை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த கொண்டாட்டம், இசை, உற்சாகம் மற்றும் ரசிகர்களின் அன்பால் நிறைந்திருந்தது.

நிகழ்ச்சி ‘மொட்டமாடி மியூசிக்’ இசைக்குழுவின் நேரடி இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து டிஜே தீபிகா தனது அதிரடி இசைத் தொகுப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் மேடையேறிய அனிருத், தனது பிரபல ஹிட் பாடல்களையும் ‘அரவிந்த்’ பாடலையும் பாடி அரங்கத்தை கொண்டாட்ட வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

நிகழ்வில் பேசிய அனிருத், எக்ஸ்பிரஸ் அவென்யூவுடனான தனது நீண்டகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உலகளவில் வைரலான ‘Why This Kolaveri Di’ பாடல் வெற்றி பெற்ற காலத்தில் இதே இடத்திற்கு வந்ததை நினைவுகூர்ந்த அவர், தற்போது தனது சொந்த இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸின் முதல் வெளியீட்டை அதே இடத்தில் கொண்டாடுவது மிகவும் உணர்வுபூர்வமான தருணம் என தெரிவித்தார்.

மேலும், தனது நண்பர் அரவிந்துக்காக பல ஆண்டுகளுக்கு முன் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் உருவான பாடல்தான் ‘அரவிந்த்’ என்றும், அது தனது இசைப் பயணத்தில் மிகவும் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும் என்றும் கூறினார்.

உலகின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், தனக்கு மிகவும் பிடித்த நகரம் சென்னைதான் என்றும், சென்னை ரசிகர்களின் அன்பு மற்றும் எனர்ஜிக்கு ஈடு இணையில்லை என்றும் அனிருத் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு ரசிகர்கள் ஆரவார கைதட்டலால் பதிலளித்தனர்.

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக ரசிகர்களின் நேரடி பங்கேற்பு அமைந்தது. பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்களில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், ‘அனிருத் வால் ஆஃப் ஃபேம்’ பகுதியில் தங்களது வாழ்த்துகள் மற்றும் நினைவுகளை பதிவு செய்தனர்.

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இந்த நிகழ்வு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. புதிய திறமைகள், அசல் இசை மற்றும் படைப்புரிமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் இணைந்து புதிய இசை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

15,000-க்கும் அதிகமான ரசிகர்கள் ஒரே இடத்தில் திரண்டு அனிருத் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, இசை மக்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

நிகழ்ச்சி நிறைவடைந்தபோது, ‘வைப் வித் அரவிந்த்’ என்பது வெறும் இசை நிகழ்ச்சி மட்டுமல்ல; இசை, நட்பு, நினைவுகள் மற்றும் ஒரு கலைஞருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான அன்பான பிணைப்பை கொண்டாடிய ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக மாறியிருந்தது.

பிராண்ட் அவதார் பற்றி:

பிராண்ட் அவதார் என்பது பொழுதுபோக்கு, கலாச்சாரம், வணிகம் மற்றும் வாழ்க்கை முறையில் பெரிய அளவிலான நேரடி நிகழ்வுகள், அறிவுசார் சொத்துகள் (IP), பிராண்ட் செயல்பாடுகள் மற்றும் சமூக மையப்படுத்தப்பட்ட தளங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற அனுபவ அடிப்படையிலான நிறுவனம்.

இந்த நிறுவனம் இசை நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள், பிரபலங்களுடனான நிகழ்வுகள், படைப்பாளர்கள் சார்ந்த விழாக்கள், விருது வழங்கும் தளங்கள் மற்றும் பல்வேறு தனித்துவமான நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

தொழில்முனைவு, புதுமை மற்றும் வணிகத்தில் வளர்ந்து வருபவர்களைக் கொண்டாடும் தென்னிந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் ரியாலிட்டி தளங்களில் ஒன்றான ‘ஸ்டார்ட்அப் சிங்கம்’-ஐ உருவாக்கியது பிராண்ட் அவதார்.

‘அனுபவங்களை உருவாக்குதல். தாக்கத்தை ஏற்படுத்துதல்.’ என்பதன் அடிப்படையாகக் கொண்டு பிராண்ட் அவதார் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் பற்றி:

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் என்பது ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரால் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன இசை நிறுவனமாகும். தனித்துவமான இசை, படைப்புரிமை மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கலைச் சுதந்திரத்தை முன்னிறுத்துதல், வளர்ந்து வரும் படைப்பாளிகளை ஆதரித்தல் மற்றும் இந்தியாவில் சுயாதீன இசைக்கான வலுவான சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது.

யுனிவர்சல் மியூசிக் இந்தியா பற்றி:

உலகின் முன்னணி இசை மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான யுனிவர்சல் மியூசிக் குழுமத்தின் ஒரு பிரிவே யுனிவர்சல் மியூசிக் இந்தியா. இந்திய திரைப்படம் மற்றும் திரைப்படம் அல்லாத இசைத் துறையின் ஆளுமைகளை ஒன்றிணைக்கிறது. கலைஞர் மேம்பாடு, இசை விநியோகம் மற்றும் பார்ட்னர்ஷிப் மூலம், இந்நிறுவனம் இந்திய திறமைகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் இணைத்து வருகிறது.

எக்ஸ்பிரஸ் அவென்யூ பற்றி:

எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்னையின் முதன்மையான ஷாப்பிங், உணவு, பொழுதுபோக்கு மற்றும் லைஃப்ஸ்டைல் மையமாகும். இது நகரின் மிகவும் புகழ்பெற்ற கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதில் பெயர் பெற்றது.

நிகழ்வு விவரங்கள்:

யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் வழங்குகிறது.