‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய இரண்டு வெற்றிப் பாடல்களின் வரிசையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய நேரத்திலேயே இந்தப் பாடல் இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் முக்கிய இடம்பிடித்து, சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
உற்சாகம், மாஸ் எனர்ஜி மற்றும் துள்ளலான இசை கலந்த இந்தப் பாடல், சூர்யாவை இதுவரை இல்லாத புதிய ஸ்டைலில் திரையில் காட்டுகிறது. அதிரடியான தாளங்கள், வேகமான இசை அமைப்பு மற்றும் திரையரங்குகளை அதிரவைக்கும் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த பாடல், ரசிகர்களை உடனடியாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது அதிரடி இசையால் பாடலுக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளார். பாடலாசிரியரும் பாடகருமான கானா காதர், பாடலை எழுதி தனது தனித்துவமான குரலில் பாடியிருப்பது, இந்தப் பாடலுக்கு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள ‘பட்டாம்பூச்சி’, ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘தி ஒன் ரூல்’ பாடலும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதன் மூலம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷி மற்றும் சாயி சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.





